Sunday 19 July 2015

விவேகானந்தரின் சிந்தனை துளிகள் (Lines of Vivekanandhar)

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:-
* உனக்குள் இருக்கும் தெய்வத் தன்மையை வெளியே காட்ட வேண்டும். அவ்வாறு செய்தால், உன்னைச் சுற்றியுள்ள எல்லாம் இசைவாக ஒழுங்குபடுத்தப்படும்.
* நம்பிக்கையும் நேர்மையும் பக்தியும் உன்னிடம் இருக்கும் வரை அனைத்தும் முன்னேற்றமடையும்.
* மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரினையும் வழிபடுங்கள்.
* ஆசைக்கும் கோபத்திற்கும் அடிமையாய் இருந்தால், உண்மையான சுதந்திரத்தின் இன்பத்தை ஒருவனால் உய்த்துணர முடியாது.
* எப்போதும் இனிமையோடும், புன்னகையோடும் இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு செல்லும்.
* சுயநலமே ஒழுக்கக்கேடு, சுயநலமின்மையே நல்லொழுக்கம். இதுதான் ஒழுக்கத்திற்கு நாம் கொடுக்கக்கூடிய ஒரே இலக்கணம்.
* உங்களுடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுங்கள், நமக்குத் தேவை, இரும்பைப் போன்ற தசைகளும், எஃகைப் போன்ற நரம்புகளும் தாம். காலமெல்லாம் அழுதுகொண்டிருந்தது போதும், இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.
- விவேகானந்தர்

No comments:

Post a Comment